என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பேரளம் வாலிபர் மரணம்
நீங்கள் தேடியது "பேரளம் வாலிபர் மரணம்"
பேரளம் அருகே பள்ளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் அரிகரன் (வயது 18).
இந்த நிலையில் அரிகரனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் அவர் தாத்தா ரெங்கநாதன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அரிகரன் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கூத்தனூர் ஆதி திராவிடர் அரசு பள்ளி கட்டிடத்தின் மேல் அரிகரன் ஏறி நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அரிகரன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பேரளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X